தமிழ்நாடு

இரண்டு பொண்டாட்டி போதாது என்று 16 வயது சிறுமியை நாசம் செய்த காமுகன்!

Published

on

ராமநாதபுரம் அருகே ரிச்சான் குண்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டி. 40 வயதான பாண்டிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் தனது அக்கா மகளின் மீது மோகம் கொண்ட பாண்டி அந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச்சென்று நாசம் செய்துள்ளார்.

கூலித்தொழிலாளியான பாண்டி தனது மாமன் மகளான தென்னரசியையும், அவரது தங்கை தாமரைச்செல்வியையும் திருமணம் செய்துகொண்டார். இந்த இரண்டு மனைவிகளும் வேறுவேறு ஊர்களில் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பாண்டி தனது முதல் மனைவியுடன் வசித்து வந்தார். அந்த வீட்டின் எதிரேதான் பாண்டியின் அக்கா வீடும் உள்ளது.

பாண்டியின் அக்காவுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் 16 வயதான மூத்த மகள் மீது பாண்டிக்கு ஆசை ஏற்பட்டது. ஏற்கனவே இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் உள்ள நிலையில் 16 வயதே ஆன அக்கா மகள் மீது மோகம் கொண்ட 40 வயதான பாண்டி அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மயக்கியுள்ளார்.

தனது மாமா பாண்டிக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆனது தெரிந்தும் அவரது ஆசை வார்த்தைகளை நம்பிய 16 வயது சிறுமி கடந்த 31-ஆம் தேதி வீட்டை விட்டு பாண்டியுடன் மாயமாகியுள்ளார். இவர்கள் பழனிக்கு சென்று முருகன் கோவிலில் திருமணம் செய்துவிட்டு பின்னர் தஞ்சாவூரில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி குடும்பம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என்று அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் பாண்டியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். பாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

seithichurul

Trending

Exit mobile version