தமிழ்நாடு
600 பெண்களின் நிர்வாண புகைப்படம்: ஆசை காட்டி மோசம் செய்த பொறியாளர்!
![Cheliyan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Cheliyan.jpg)
சென்னையை சேர்ந்த சாஃப்ட்வேர் பொறியாளர் ஒருவர் 600 பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி அவர்களது நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செலிமெண்ட் ராஜ் செழியன் என்பர் சென்னையை சேர்ந்த பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எம்.டெக் பட்டதாரியான இவர் வேலைவாய்ப்பு இணையதளத்தை தொடங்கி ரிசப்ஷனிஸ்ட் வேலைகளைத் தேடும் பெண்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொடர்பு கொள்கிறார். அவர்களிடம் தன்னை பிரதீப் என்று அறிமுகப்படுத்தும் செழியன் நிச்சயம் வேலை வாங்கித் தருகிறேன் என்ற நம்பிக்கையை வரவழைக்கிறார்.
பின்னர் எங்கள் நிறுவனத்தின் பெண் ஹெச்.ஆர். உங்களுக்கான வேலையை இறுதி செய்வார் அவருக்கு நீங்கள் ஒத்துழையுங்கள் என கூறுகிறார். பின்னர் அவரே வேறொரு நம்பரில் இருந்து பெண் குரலில் வேலைக்கு ஆள் எடுப்பது போல சில கேள்விகளை கேட்கிறார். தொடர்ந்து ரிசப்ஷனிஸ்ட் வேலை என்பதால் கவர்ச்சியான உடல் அமைப்புத் தேவை அதனால் உங்களுடைய நிர்வாணப் புகைப்படம் வேண்டும் என்று நிர்வாணப் படங்களைப் பெற்று அவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார்.
16 மாநிலங்களை சேர்ந்த 600 பெண்களிடம் இதுபோன்று வேலை வாங்கி தருவதாக நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டி வந்துள்ளார் செழியன். இதில் ஹைதராபாத்தில் இருந்து 60 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 29 பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 5 மாத முயற்சிக்கு பின்னர் செழியனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.