உலகம்

22 அடி நீளமான பாம்பை அசால்ட்டாக தூக்கி செல்லும் நபர் – வைரல் வீடியோ

Published

on

பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள்.

ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ அல்லது துன்புறுத்தினால் மட்டுமே அது நம்மை தாக்க துவங்கும். அதுவும் தன் உயிரை பாதுகாத்து கொள்ளவே!. இந்த உண்மை புரியாமல் பாம்பை கண்டாலே அதை அடித்து கொள்ள வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள்.

அதேநேரம் பாம்பை வளர்ப்பு பிராணியாக வளர்க்கும் பழக்கம் மேலை நாடுகளில் அதிகரித்து வருகிறது. வீட்டில் வளரும் பாம்புடன் சிறு குழந்தைகள் கூட விளையாடும் மற்றும் தூக்கி தோளில் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாவதுண்டு.

இந்நிலையில், ஒரு பாம்பு பண்ணையில் 22 அடி நீளமும், 120 கிலோ எடையும் உடையை ஒரு பாம்பை அங்கு பணிபுரியும் நபர் தனது தோளில் தூக்கி செல்லும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version