இந்தியா

சிறுநீர் கலந்து பானிபூரி விற்ற வியாபாரி…. அதிர்ச்சி வீடியோ…….

Published

on

வடமாநிலங்களில் மட்டுமில்லாமல் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் தீனியாக மாறியிருப்பது பானிபூரி. வடமாநிலங்களில் இருந்து பலரும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் சென்று பானிபூரியை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், அந்த பானிபூரியை விற்பனை செய்பவர்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்பதை யாரும் பார்ப்பதில்லை. இது தொடர்பான பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் சாலையோரத்தில் பானிபூரி விற்கும் நபர் ஒருவர் குவளையில் சிறுநீர் கழித்து அதை பானிபூரி விற்பனைக்கு பயன்படுத்தும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலானவுடன் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version