இந்தியா

மம்தா பானர்ஜி தேர்தலில் தோற்பது உறுதி: நந்திகிராம் பாஜக வேட்பாளர் பேட்டி

Published

on

மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோற்பது உறுதி என அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்துஅதிகாரி தனது வாக்கை செலுத்தினார். நந்திகிராம் தொகுதியில் ஓட்டு செலுத்தியபின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது மம்தா பானர்ஜி இந்த தேர்தலில் தோற்பது உறுதி என்றும் பாஜகதான் மேற்குவங்கத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version