தமிழ்நாடு
போதிய அளவு இருப்பு வைத்து கொள்ளுங்கள்: பிரதமர் மோடிக்கு மம்தா அறிவுரை!
தடுப்பூசியை இலவசமாக வழங்குதல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரொனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருகிறது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையையும் போக்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேற்குவங்க முதல்வரின் அறிவுரையை ஏற்று பிரதமர் மோடி செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.