உலகம்
ஒரு ரத யாத்திரையை நடத்த இத்தனை பிரச்சனையா?.. திணறும் அமித் ஷா.. தெறிக்கவிடும் மமதா!
கொல்கத்தா: பாஜக கட்சி மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரையை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது.
பாஜக ஓவ்வொரு முறையும் ரத யாத்திரை மூலம் பெற்ற பயன்கள் ஏராளம். பாஜக வட மாநிலத்தில் ஒரு இடத்தில் ரத யாத்திரை நடத்தினால், அதற்கு அடுத்த தேர்தலில் அங்கு பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி. இது பல முறை பாஜகவிற்கு நடந்துள்ளது.
ஆனால் இந்த முறை பாஜக ரத யாத்திரையை நடத்துவதற்கே முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரையை நடத்த கடந்த மூன்று மாதமாக பாஜக காத்து இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் கூச்பேகர் பகுதியில் ரத யாத்திரை நடத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டு இருந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமித் ஷா இந்த திட்டத்தை வகுத்தார். 3 மாதங்களுக்கு முன்பே பாஜக இதற்காக தயாராகி இருந்தது.
ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இந்த ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த பேரணியால் அமைதி கெடும், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மமதா பானர்ஜி கூறினார். இதையடுத்து பாஜக உடனடியாக கொல்கத்தா ஹைக்கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.