இந்தியா

தேர்தலில் மாபெரும் வெற்றி; சொந்த தொகுதியில் ஜஸ்ட் மிஸ்ஸில் தோல்வி; மம்தாவுக்கு ஏற்பட்ட சோதனை!

Published

on

மாலை 7 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி,190 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 211 தொகுதிகளில் திரிணாமூலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக, 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 3 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையும் மம்தா தலைமையிலான ஆட்சியே மேற்கு வங்கத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மேற்கு வங்க நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியைவிட சில ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார். மாலை 7 மணி நிலவரப்படி மம்தா, 52,815 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் சுவேந்து அதிகாரி, 62,677 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

மம்தா பானர்ஜியை விட சுவேந்து அதிகாரி, 9,862 வாக்குகள் முன்னிவலை வகித்து வருவதாக தேர்தல் ஆணைய தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நமக்கு வந்துள்ள நம்பத்தகுந்த வட்டார தகவல்படி, சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியை 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த தோல்வி குறித்து மம்தா, ‘நந்திகிராம் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே நீதிமன்றத்தை நாடுவேன். அதே நேரத்தில் நாங்கள் மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version