இந்தியா
தள்ளிவிட்ட நபர்கள்… காயமடைந்த மம்தா பானர்ஜி… மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினை தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய தொகுத்தி சென்றிருந்தார் மம்தா. அப்போது அவரை சில நபர்கள் தள்ளிவிட்டதாகவும், இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் மம்தா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இத்தாக்குதல் குறித்து மம்தா, ‘பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் இல்லாத சமயம் பார்த்து என்னை 4, 5 நபர்கள் தாக்கி இருக்கிறார்கள். இது எனக்கு எதிராக தீட்டப்பட்ட சதித் திட்டம் தான்’ என்று பொங்கியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, ‘மம்தாவைச் சுற்றி எபோபதும் மிகப் பெரும் போலீஸ் படை இருக்கிறது. அதைத் தாண்டி அவரை யாரால் தாக்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது.