தமிழ்நாடு
யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிப்பு: காவல்துறை அதிரடி நடவடிக்கை!
நடிகை யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம் அருகே நேற்று நடிகை யாஷிகா, தனது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் நடிகை யாஷிகா தான் காரை ஓட்டி வந்ததாகவும் அவர் அதிவேகமாக காரை ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து யாஷிகாவின் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தனர் என்பதும் மேலும் இந்த வழக்கு விசாரணை செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். மாமல்லபுரம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே எந்தவித வாகனத்தையும் யாஷிகா இனிமேல் ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடத்தப்பட இருப்பதாகவும், யாஷிகா உடன் வந்த இரண்டு ஆண் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.