இந்தியா

காங்கிரஸ் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா? மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக் கேள்வி!

Published

on

காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்றால் பிரதமர் நரேந்திர மோடி தூக்கில் தொங்குவாரா என சர்ச்சைக்குறிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் குறைவாக 44 இடங்களை தான் 2014-ஆம் ஆண்டில் பெற்றது. இந்தமுறை அதைவிடக் குறைவாகத்தான் காங்கிரஸ் கட்சி வெல்லும் என கூறிவருகிறார். மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் கலாபுராகி தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வெல்லாது என்று கூறி வருகிறார். அதை நீங்கள் நம்புகிறீர்களா? காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கு மேல் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா? என சர்ச்சைக்குறிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version