செய்திகள்
பிறந்த குழந்தை உயிரோடு எரிப்பு.. சேலத்தில் அதிர்ச்சி….
முறைதவறி பிறந்த குழந்தையை குப்பைதொட்டியில் வீசிவிட்டு செல்வது, சாலையோரம் வீசி செல்வது, மருத்துவமனையிலேயே விட்டு செல்வது என பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம்.
ஆனால், பிறந்த ஆண் குழந்தையை சாலையோரத்தில் உயிரோடு வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் தெரு பகுதியில் நேற்று இரவு ஆண் குழந்தை ஒன்று சாலையோரத்தில் எரிக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
எனவே, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு உடற் கூறாய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறைப்பிரசவத்தில் பிறந்ததால் இந்த குழந்தை எரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.