சினிமா செய்திகள்

’மாஸ்டர்’ திரைப்படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்த மலேசிய ரசிகை!

Published

on

தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த ரசிகை ஒருவர் ஒட்டுமொத்த தியேட்டரையும் புக் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது என்பதும் அதன் பின்னர் 16 நாட்களில் ஓடிடியில் வெளியானது என்பதும் தெரிந்தது. இந்நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்காக மலேசியாவைச் சேர்ந்த ஆஷ்லினா என்ற விஜய் ரசிகை சென்னைக்கு வந்தார்

அவர் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்க சென்றபோது டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றம் அடைந்தார். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள திரையரங்கில் உள்ள ஒட்டுமொத்த டிக்கெட்டையும் புக் செய்த ஆஷ்லினா தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு ’மாஸ்டர்’ படத்தை பார்த்தார்

படம் பார்க்கும் போது விஜய் வரும் காட்சிகளின் போதெல்லாம் அவர் கத்தி போஸ் கொடுத்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ’மாஸ்டர்’ திரைப்படத்தை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த விஜய் ரசிகை, ஒட்டுமொத்த திரையரங்கில் உள்ள அனைத்து விக்கெட்டுகளையும் புக் செய்துள்ளதை விஜய் ரசிகர்கள் ஆச்சரியமாக பகிர்ந்து வருகின்றனர்,.

Trending

Exit mobile version