சினிமா

மலையாள நடிகை காயத்ரி அருணை படுக்கைக்கு அழைத்த நபர் 1மணிநேரத்திற்கு ரூ.2 லட்சம் கொடுப்பதாகக் கூறியுள்ளார்!

Published

on

ஏசிய நெட்டில் ஒளிபரப்பான பரஸ்பரம் என்ற தொடரில் நடித்துப் புகழ்பெற்றவர் காயத்ரி அருண். தற்போது பல தொடர்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மலையாள தொடர்களின் முன்னணி நடிகையாக இருக்கும் காயத்திரி அருண் என்பருகு ஒரு ஆபாச அழைப்பு விடப்பட்டிருக்கிறது. இதனை அவர் மிகவும் சாதூர்யமாகக் கையாண்டு பரட்டுக்களைப் பெற்று வருகிறார்.

கடந்த சில தினங்களாக அவரது பேஸ்புக் முகவரியில் ஒருவர் தினமும் ஆபாச செய்திகள் அனுப்பி வந்துள்ளார். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் காயத்திரி.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர், “நீங்கள் ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ.2 லட்சம் ரூபாய்த் தருகிறேன் என்று பேஸ்புக்கில் வாலிபர் அழைப்பு விடுத்ததுள்ளார். இதைப் பார்த்த காயத்திரி, உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் எனப் பதில் அளித்துள்ளார்.

“நீயெல்லாம் அக்கா தங்கச்சியோடு பிறக்கவில்லையா?“ என்பதையே இப்படி நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், வாலிபரின் நபரின் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டிரு கிறார். தற்போது இது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version