சினிமா செய்திகள்
புலிக்கு அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி மாளவிகா எடுத்துக் கொண்ட போட்டோ!- இது வேற லெவலுங்க…
நடிகை மாளவிகா மோகனன், மிக மூர்க்கமான காட்டு விலங்கான புலி ஒன்றுக்கு அருகில் எடுத்துக் கொண்ட புகைப்படம் பார்ப்போரை கிரங்கடிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான மாளவிகா, ‘மாஸ்டர்’ படம் மூலம் தளபதி விஜய்யுடன் ஜோடி போட்டு புகழின் உச்சிக்கே சென்றார். தற்போது தனுஷுடன் அவர் அடுத்தப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதைத் தவிர பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் மாளவிகா.
தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த மாளவிகா, தற்போது ஆஃப்-டைம் எடுத்துள்ளார். இந்த சிறிய பிரேக்கில் மாளவிகா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தன்போர் தேசியப் பூங்காவில் வனவிலங்கு சஃபாரி செய்துள்ளார். அப்போது புலி ஒன்றுக்கு அருகில் அவர் புகைப்படம் எடுத்து, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் பார்ப்போரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. படத்துடன் மாளவிகா, ‘ஒரு காலையைத் தொடங்க இது தான் மிகச் சிறந்த வழியாக இருக்கும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
வைரல் புகைப்படம் இதோ: