தமிழ்நாடு
கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டாரா? மக்கள் நீதி மய்யம் விளக்கம்!
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவரது உடல்நிலை தேறி வருகிறது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன
இந்த நிலையில் கமல்ஹாசன் திடீரென இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் அவரை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின
இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார் ஆகவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என மக்கள் நீதி மையம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த அறிக்கையை அடுத்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகி விட்டார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 30, 2021