தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா: கட்சி கலைப்பா?

Published

on

தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து மூன்றாவது கூட்டணியாக உருவாகியிருந்த மக்கள் நீதி மய்யம் கூட்டணி நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவரும் அங்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர் என்பதும் அதிர்ச்சியான தகவல் ஆகும். இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பலர் ஆலோசனை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னணி தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே கமீலா நாசர் உள்பட பலர் ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது முக்கிய பிரமுகர்கள் ராஜினாமா செய்துள்ளதால் கட்சி கலைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

author avatar
seithichurul

Trending

Exit mobile version