உலகம்
இலங்கை அமைச்சரவையில் 4 ”ரா” உளவாளிகள்.. திடுக்கிடும் தகவல்!
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர்கள் நான்கு பேர்தான் இந்தியாவிற்கு மைத்ரிபால சிறிசேனா பற்றிய தகவல்களை அனுப்புவது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதை கூறியதே மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் அமரவீராதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அமரவீரா, மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவையில் நான்கு ரா உளவாளிகள் உள்ளனர். அவர்கள் விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.