தமிழ்நாடு

தேமுதிகவுக்கு தூதுவிட்ட மய்யம்!!

Published

on

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது தனித்துத் தேர்தலைச் சந்திக்குமா என்று தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ் தங்கள் கூட்டணிக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வரவேண்டும் என்று கூறி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், கூட்டணி குறித்து பேசுவதற்காக விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Trending

Exit mobile version