உலகம்

வெளிநாடு தப்பி செல்ல ராஜபக்சே திட்டம்: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்!

Published

on

வெளிநாடு தப்பி செல்ல ராஜபக்சே திட்டம்: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்!

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினர்தான் இலங்கை பொருளாதார சீரழிவுக்கு காரணம் என பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இலங்கை எம்பி அமரகீர்த்தி என்பவர் நேற்று பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்ட நிலையில் மஹிந்தாவின் வீடும் நேற்று தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. போராட்டம் வலுத்து வருவதை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மஹிந்தா ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது .

இது குறித்த தகவல் வெளியே கசிந்ததும் இலங்கையிலுள்ள கொழும்பு விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வெளிநாட்டிற்கு மகிந்த ராஜபக்ச எப்படி தப்பி செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது .

மஹிந்தா ராஜபக்சே மட்டுமன்றி கோத்தபாய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்றும் இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version