உலகம்

முதல் அறிவிப்பே பரபரப்பு.. இலங்கை பிரதமரான ராஜபக்சேவின் அதிரடி!

Published

on

கொழும்பு: இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டின் புதிய  பிரதமர் ராஜபக்சே அறிவித்து இருக்கிறது.

ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டபின் வெளியிட்ட முதல் அறிக்கையே மிகவும் பரபரப்பான அறிக்கையாக உள்ளது. அதன்படி இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு முன் இருந்த பிரதமரும் அவரது அமைச்சர்களும் தேர்தலை நடத்தாமல் தள்ளிபோட்டுக் கொண்டே சென்றனர்.

தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர். அவர்கள் நடத்தாமல் இருந்த தேர்தலை நடத்துவதே எங்கள் நோக்கம். தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றுள்ளார்.

 

Trending

Exit mobile version