சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் மகேந்திரனுக்கு என்றும் தனி இடம் உண்டு – ரஜினி அஞ்சலி!

Published

on

இயக்குநர் மகேந்திரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது திரு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் எல்லாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் மகேந்திரனின் நெருங்கிய நண்பரான ரஜினி, பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகேந்திரன் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் ரஜினி கூறினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, எனக்குள் இருக்கும் ரஜினியை வெளிக்காட்டியவர் மகேந்திரன் தான். தமிழ் சினிமா உள்ளவரை மகேந்திரனுக்கு என்று தனி இடம் என்றுமே இருக்கும் என்றார்.

மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட பல படங்களில் ரஜினி நடித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version