சினிமா செய்திகள்
இன்று பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறுபவர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து முதல் சீசனுடன் ஒப்பிட்டுப் பேசி வந்த நிலையில் அதனைக் கமல் செய்யக் கூடாது என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அவரையே நேற்று பிக்பாஸ் சீசன் ஒன்று பற்றி ஒப்பிட்டுப் பேச வைத்துவிட்டார்கள்.
மகத், ஐஷ்வர்யா இருவரும் கடந்த சில வாரங்களாகவே மும்தாஜ் உடன் மிகப் பெரிய உரசலில் ஈடுபட்டு வந்தனர். அதில் சென்ற வாரம் டாஸ்க்குகளில் மகத் மிகவும் கோபமாகவும், மும்தாஜை எல்லை மீறும் அளவிற்கும் எதிர்த்து நடந்துக் கொண்டது பார்வையாளர்கள் மத்தியில் வெறுப்பினை ஏற்படுத்தியது.
இன்று சென்ற வாரத்திற்கான எலிமினேஷன் படலம் நடைபெற உள்ள நிலையில் அதில் பாலாஜி, மகத், சென்றாயன், மும்தாஜ் உள்ளிட்டோர் உள்ளனர். ஆனால் இது முன்றை வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக ரெட் கார்டு மூலம் அறிவிப்பினை செய்ய இருப்பதாகக் கமல் நேற்றைய நிகழ்ச்சி முடிவில் தெரிவித்துள்ளார்.
கால் பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் கோபமாக விளையாடி பிறரை தாக்குபவர்களை ரெட் கார்டு அளித்து வெளியேற்றுவது வழக்கம். அதே போன்று பிக்பாஸ் இல்லத்திலும் மகத் ரெட் கார்டு அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாகச் செய்தி சுருள் கணித்துள்ளது.
காத்திருப்போம் இன்று மாலை வரை, பிக்பாஸ் என்ன முடிவெடுக்கிறார் என்று.