இந்தியா

பேராபத்தில் மகாராஷ்டிரா, ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் பலி!

Published

on

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 97 கொரோனாவால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை மகாராஷ்டிராவில் 54,758 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக 2,091 நபர்களுக்கு ஒரே நாளில் கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

97 நபர்கள் இறந்துள்ளனர். அதனால் மகாராஷ்டிராவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,792 ஆக அதிகரித்துள்ளது. இப்படியே சென்றால் அமெரிக்கா போல இந்தியாவும் கொரோனாவால் அதிக இறப்புகளைச் சந்திக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

மகாராஷ்டிராவில் இதுவரை 3,90,170 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version