சினிமா

தீராத பாஞ்சாயத்து!.. விஜய் சேதுபதி மீது வழக்கு தொடர்ந்த சர்ச்சை நபர்….

Published

on

சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் பின்னாலிருந்து எட்டி உதைப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இதன் பின்னணி என்ன? அவர் ஏன் விஜய் சேதுபதியை தாக்க முயன்றார் என்பது தெரியாமல் இருந்தது.

அதன்பின், அந்த மர்ம நபர் பெயர் மகா காந்தி எனவும், அவர் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் தீவிர பக்தர் எனவும் தெரிய வந்தது. மேலும், தன்னை தேசப்பற்று உள்ளவன் எனவும், சில படங்களில் நடித்துள்ளேன் எனவும் கூறி வருபவர் அவர்.

இதுபற்றி விளக்கமளித்த மகா காந்தி ‘அந்த விமானத்தில் விஜய் சேதுபதியை பார்த்தவுடன், தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இது தேசமா? எனக் டேட்டார். அதன்பின், குருபூஜையில் கலந்து கொண்டீர்களா எனக் கேட்டார். எந்த குரு எனக்கேட்டார். அதன்பின் விமான நிலையத்தில் தன் லக்கேஜுக்காக காத்திருந்த போது என்னை பின்னாலிருந்து சிலர் அடித்தனர். அது விஜய் சேதுபதியா இல்லை அவரின் ஆட்களா என எனக்கு தெரியாது. அந்த கோபத்தில்தான் அவரை தாக்க சென்றேன்’ என அவர் விளக்கமளித்தார்.ஆனால், விஜய் சேதுபதி இதுபற்றி எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருந்தார்.

இந்நிலையில்,விஜய் சேதுபதிகு எதிராக மாகா காந்தி சைதாப்பேடை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த போது ஏற்க மறுத்து இழிவுபடுத்தி தவறாக பேசியதாகவும், அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version