தமிழ்நாடு

எதிரே இருப்பவரை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி: பெரியகுளத்தில் பெரும் மோசடி!

Published

on

எதிரே இருப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி தன்னிடம் இருப்பதாக கூறி பெரிய குளத்தில் மர்ம நபர்கள் இருவர் பெரும் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்த இருவர் தங்களிடம் எதிரே இருப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி இருப்பதாக கும்பகோணத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு விலை பேசி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த கண்ணாடியை வாங்குவதற்காக பெரிய குளத்திற்கு யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் வந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த தென்னரசு மற்றும் திவாகர் ஆகியோர் ஒரு லட்ச ரூபாய் பணத்தை பெற்று கொண்டு மாயக்கண்ணாடி கொடுப்பதை தாமதப்படுத்தினர்.

ஒரு கட்டத்தில் இருவரும் திடீரென ஓடத் தொடங்கிய நிலையில் அவர்கள் இருவரையும் யுவராஜ் மற்றும் நண்பர்கள் விரட்டி பிடித்து உள்ளனர். இதனை பின்னர் இருவரில் ஒருவர் மட்டுமே பிடிபட்டதாகவும், அவரை பெரியகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பணத்துடன் தப்பி ஓடிய இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version