தமிழ்நாடு

ஜோசப் விஜய் எனும் நான்” : மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

Published

on

சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் மதுரையில் அவ்வப்போது ஒட்டப்படும் என்பதும் குறிப்பாக விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் 2031ஆம் ஆண்டில் ’ஜோசப் விஜய் என்னும் நான்’ என்ற போஸ்டர் மதுரை நகரைப் தற்போது கலக்கி வருகிறது. இது குறித்த புகைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் இந்த தேர்தலில் 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளில் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் இவர்களில் 13 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விஜய் விரைவில் அரசியலில் இறங்குவார் என்றும் 2026 ஆம் ஆண்டில் அவர் அரசியலில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தி, 2031 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.

இதனை சித்தரிக்கும் வகையில் 2031 இல் ’ஜோசப் விஜய் நான், உண்மையான நம்பிக்கையுடனும், மாறா பற்றும் கொண்டு இருப்பேன் என உறுதி கூறுகிறேன் என பதவிப்பிரமாணம் எடுப்பது போன்ற போஸ்டர் ஒன்று மதுரை நகரில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version