தமிழ்நாடு

தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கம்.. இனி மதுரை – சென்னை ஈஸியாக செல்லலாம்!

Published

on

மதுரை – சென்னை இடையேயான தேஜஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் முக்கிய நகரமான மதுரைக்கும் சென்னைக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் ரயில் சேவை நிறுத்தப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். மதுரை எம்பி வெங்கடேசன் இதுதொடர்பாக மத்திய ரயில்வே துறைக்கு கடிதமும் எழுதினார்.

இந்த நிலையில், மதுரை-சென்னை இடையேயான தேஜஸ் ரயில் சேவை நிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்ட முடிவை திரும்பப் பெறப்போவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தேஜஸ் ரயில் சேவை வரும் 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், இந்த ரயில் சேவை தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது.

Trending

Exit mobile version