தமிழ்நாடு
மீண்டும் மதுரை-செங்கோட்டை ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
![madurai sengottai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/madurai-sengottai.jpg)
மதுரை – செங்கோட்டை இடையே இயங்கிவந்த ரயில் தென் மாவட்ட மக்களை மிகவும் பயனுள்ளதாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மதுரை – செங்கோட்டை இடையே வரும் 30-ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரையில் இருந்து இந்த ரயில் 7.10 மணிக்கு கிளம்பும் என்றும் செங்கோட்டைக்கு 03.45 மணிக்கு சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 7.10 மணிக்கு வந்தடையும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் முன்பதிவு இல்லாத மதுரை – செங்கோட்டை ரயில் இயக்குவதால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையிலிருந்து மதுரை வரை ரயில்களில் செல்லும் பயணிகள் பலர் இந்த ரயில் மூலமாகத்தான் தென்மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளதை அடுத்து சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பல நகர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.