தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஜெயகுமார் திடீர் நீக்கம்? அதிர்ச்சி தகவல்

Published

on

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் நீக்கப்பட்டதாக மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் என்பவர் நகர் முழுவதும் பரபரப்பாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் அதிமுகவின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி, சிவி சண்முகம் மற்றும் ஜெயகுமார் ஆகிய நால்வரும் ஈடுபடுவதாகவும் அதனால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட நால்வருடன் அதிமுக தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்ட் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த போஸ்டரில் ஓ பன்னீர்செல்வம் படத்தை கிழித்ததற்கு பதிலடியாக மதுரை அதிமுகவினர் இந்த போஸ்டர்களை அடித்து ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போஸ்டருக்கு எடப்பாடிபழனிசாமி தரப்பினர் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version