தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா.. பக்தர்கள் பரிசோதனைக்கு அழைப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பக்தர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பரிசோதனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பூட்டப்பட்டு, அவ்வப்போது மக்கள் இல்லாமல் பூஜைகள் மட்டும் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், கொரோனா பாதிப்புகளுக்கு முன்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர், வெளிநாடு சென்று வந்துள்ளார். ஆனால் அதை அவர் வெளியில் சொல்லவில்லை. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள், ஊரடங்கிற்கு சில வாரங்கள் முன்பு வரை சென்று வந்த பக்தர்கள், பட்டரின் குடும்பம், கோவிலின் பாதுகாப்பு பணியில் இருந்து காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துள்ளனர்.
மேலும் பட்டரின் தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.