தமிழ்நாடு

மதுரை சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

Published

on

இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என்றாலும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சித்திரை திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் அருளைப் பெறுவார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்பட அனைத்திற்கும் பக்தர்கள் அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருந்தது

ஆனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மீனாட்சி திருக்கல்யாணம் ஆகிய இரண்டுக்கும் இந்தத் ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி உண்டு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

seithichurul

Trending

Exit mobile version