தமிழ்நாடு

ராஜராஜசோழன் சோழன் குறித்த பா. ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனர் பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
கடந்த 2019ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் பா ரஞ்சித் பேசியபோது ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ராஜராஜ சோழன் காலத்தில்தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும் ராஜராஜ சோழனின் காலம் இருண்ட காலம் என்றும் அவர் தெரிவித்தார்

இந்த பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி உள்பட பலர் கண்டனம் தெரிவித்ததோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இயக்குநர் ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
மேலும் இந்த உத்தரவில் ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version