தமிழ்நாடு
மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் நீதிபதி கேள்வி!
![sv sekhar 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/sv-sekhar-1200.jpg)
பெண் பத்திரிக்கையாளர் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பார்வர்டு செய்த பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர் குறித்த பதிவு ஒன்றை நடிகர் எஸ்வி சேகர் தனது முகநூல் பக்கத்தில் பார்வேர்ட் செய்தார். இதனை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது என்பதும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகார்களின் அடிப்படையில் எஸ்வி சேகர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தனக்கு வந்த முகநூல் பதிவு ஒன்றை படிக்காமல் பார்வர்டு செய்து விட்டதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் எஸ் வி சேகர் தெரிவித்தார்.
ஆனால் அந்த மன்னிப்பை ஏற்க மறுத்த நீதிபதி ’மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? படிக்காமல் ஏன் பார்வர்டு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்த பதிவு செய்த எஸ்வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.