தமிழ்நாடு

டியூசன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Published

on

டியூசன் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகள் அல்லது வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை பெற தனி தொலைபேசி எண், அலைபேசி எண் ஆகியவற்றை உருவாக்கி இதுகுறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரசுத் துறை அலுவலர்களை ஒப்பிடும்போது ஆசிரியர்களின் வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது என்றும் டியூசன் எடுப்பது போன்ற செயல் ஆசிரியர் சமூகத்தில் புற்று நோய்போல் பரவி உள்ளது என்றும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அதிகரிப்பதாக உள்ளது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .

டியூஷன் உள்ளிட்டவற்றை தொடர அனுமதித்தால் ஆசிரியர்களின் மேம்பாடு பணியை அவரிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த உத்தரவால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version