தமிழ்நாடு
மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுமா? மதுரை கலெக்டர் தகவல்!
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்விழாவாக சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டாவது மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் என்று மதுரை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதை அடுத்து மதுரை கலெக்டர் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உள்திருவிழாவாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் திருவிழா போன்ற மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் என்பதால் மதுரை கலெக்டர் எடுத்த முடிவு சரியானது என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.