தமிழ்நாடு
தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நன்றி: மதுரை ஆதீனம்
பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்றால் என்னவென்றே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை உலகறியச் செய்த திராவிட கழகத் தலைவர் வீரமணி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார் .
சமீபத்தில் தருமபுர ஆதீன மடத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிட கழகத்தின் புகார் காரணமாக தடை வழங்கப்பட்டது. இதற்கு பாஜக மற்றும் இந்து ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மடங்களில் சமய சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
ஆனால் அதே நேரத்தில் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லிவிட்டார் என்றும் இனிமேல் அவர் அவ்வாறு சொல்ல மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.