Connect with us

தமிழ்நாடு

நித்தியானந்தாவின் பரபரப்பு அறிக்கைக்கு இடையே புதிய மதுரை ஆதினம் நியமனம்!

Published

on

மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் சுவாமி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மதுரை ஆதினம் மறைவு குறித்து கூறியதாவது: ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் பதவியேற்கவுள்ளதாக மதுரை ஆதீனத்தில் உள்ள மடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு இளவரசராக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபுரி ஆதீனம், திருவாவடுதுறை ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதினம் உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற ஆதீனங்கள் சார்பில் இவருக்கு மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக மேல் முடி சூட்டப்படும் என்றும் முடி சூட்டப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதினம் தான் என நித்தியானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் நித்தியானந்தாவின் அறிக்கையை பொருட்படுத்தாமல் மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதீனமாக ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!