தமிழ்நாடு

பள்ளிகளே திறக்கவில்லை, தியேட்டர்களுக்கு மட்டும் 100% சீட்டா? செக் வைத்த நீதிமன்றம்

Published

on

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தியேட்டர்களுக்கு மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில் அமலில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் பள்ளிகளே செயல்படவில்லை. ஆனால், திரையரங்குகள் மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவது எந்த விதித்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினர்.  தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தியேட்டர் விவகாரத்தில் தற்போதுள்ள 50% இருக்கை நிலையே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்களின் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தியேட்டர்கள் முழுவதுமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய், முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version