தமிழ்நாடு

ஏலத்திற்கு வந்தது மதுவந்தி வீடு: ரூ.1.50 கோடிக்கு ஏலம் விட முடிவா?

Published

on

பிரபல காமெடி நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீடு ஏலத்திற்கு வர உள்ளதாகவும் அவரது வீட்டை ரூ.1.50 கோடிக்கு ஏலம் விட பைனான்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மகளும் பாஜக பிரமுகருமான மதுவந்தி அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்குவதற்காக ஹிந்துஜா பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் ரூபாய் ஒரு கோடி கடன் பெற்றார். கடன் பெற்ற பின்னர் அவர் ஒரு சில மாதங்கள் மட்டும் தவணைத் தொகை கட்டிவிட்டு அதன்பிறகு காட்டாமல் விட்டு விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அசல் மற்றும் வட்டி ஆகியவை சேர்ந்து 1.22 கோடி ரூபாய் உள்ளதாகவும் உடனடியாக அதைச் செலுத்த வேண்டுமென்றும் மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதில் அளித்த மதுவந்தி கால அவகாசம் கேட்டதை அடுத்து அவர் கேட்ட கால அவகாசத்தையும் பைனான்ஸ் நிறுவனம் கொடுத்தது. ஆனால் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் மதுவந்தி பணம் கட்டவில்லை என்பதை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து மதுவந்தியின் வீட்டுக்கு சில் வைத்து சாவியை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து மதுவந்தி வீடு சீல் வைக்கப்பட்டது என்பதும் தனது வீட்டுக்கு சீன் வைக்க வேண்டாம் என மதுவந்தி கெஞ்சிய வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுவந்தியின் வீட்டை ஏலம் விட்டு தங்களது பணத்தை எடுத்துக்கொள்ள பைனான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது வரை வட்டி மற்றும் அசல் ஆகியவை சேர்த்து 2.02 கோடி வரவிருக்கும் நிலையில் 1.50 கோடிக்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெற 15 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும் என்றும் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் மதுவந்தியின் வீடு ஏலத்திற்கு வரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version