செய்திகள்
மதுரை ஆதீனம் காலமானார்…பக்தர்கள் அதிர்ச்சி…
மதுரை ஆதினம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர்(77). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வயது முதிர்வு காரணமாக கடந்த 9ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை முதலே அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணமடைந்துள்ளார். அவரின் மறைவுக்கு ஆன்மிக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.