சினிமா

பிக் பாஸ் போட்டிக்கு மதுமிதாவின் சம்பளம்? இன்னும் பாக்கி தொகை எவ்வளவு தெரியுமா?

Published

on

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் இதுதொடர்பான எந்த வீடியோவும் ஒளிபரப்பப்படாமல் மதுமிதா போட்டியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டதால் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் மதுமிதாவுக்கும் விஜய் டிவி தரப்புக்கும் இடையே தற்போது மோதல்போக்கு வலுத்துள்ளது. வெளியே வந்த மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் சென்னை கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் மதுமிதாவிற்கு ஒரு நாளைக்கு 80000 ரூபாய் சம்பளம்.

ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கனவே 1150000 பெற்றுள்ளார். மீதமுள்ள 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறினோம். ஒப்புக் கொண்டு சென்றவர் 19-ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்றும், நீங்கள் தரும் வரை காத்திருக்க முடியாது என்று மிரட்டினார் என கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version