தமிழ்நாடு

இந்து கடவுளுடன் சிலுவை வைத்திருந்த சர்ச்சை: பதிலடி கொடுத்த மாதவன்!

Published

on

நேற்று முன்தினம் சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டத்தை தனது வீட்டில் கொண்டாடிய பிரபல நடிகர் மாதவன், அந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மாதவன் பகிர்ந்த அந்த புகைப்படத்தில் மாதவனின் வீட்டில் இந்துக் கடவுகள்களுடன் கிறிஸ்தவர்களின் சிலுவையும் இடம்பெற்றிருந்தது. இது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது. சிலர் மாதவை வசைபாட ஆரம்பித்தனர். அதில் ஒருவர் தனது டுவிட்டரில், பின்னணியில் ஏன் இந்து கடவுள்களுடன் சிலுவை இருக்கிறது. அது என்ன கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்துக் கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம் விமர்சித்தார்.

இந்த டுவீட்டுக்கு பதில் அளித்த மாதவன், உங்களை போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அந்த புகைப்படத்தில் உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது. அதுமட்டுமல்ல தர்காவிற்கும் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுவருவேன். நான் சிறுவயதிலிருந்தே எனது அடையாளத்தை பெருமையாகவும் அதே நேரத்தில் மற்ற மதங்கள் மேல் மரியாதை செலுத்தும்விதமாகவும் வளர்க்கப்பட்டுள்ளேன். எனக்கு எம்மதமும் சம்மதம் என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version