சினிமா செய்திகள்

சீமான் – லிங்குசாமி பிரச்சனைக்கு மாதவன் தான் காரணமா?

Published

on

சீமான் மற்றும் லிங்குசாமி இடையே கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கதை பிரச்சனைக்கு நடிகர் மாதவன் காரணமா? என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பரவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சூர்யா நடித்த அஞ்சான் என்ற திரைப்படத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்தபோது அந்த கதை தன்னுடையது என்று என்று சீமான் பிரச்சனை செய்ததாகவும், அப்போது சூர்யா முன்னிலையில் பஞ்சாயத்து பேசப்பட்டதாகவும் சீமானின் கதை என்று சொல்லப்படும் அந்த கதையை படமாக்கவில்லை என்றும் வேறு கதையை தயார் செய்து கொள்வேன் என்றும் புரிந்துணர்வு லிங்குசாமி சீமானிடம் தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்ட தாக கூறப்படுகிறது.

இதன்படி சர்ச்சைக்குரிய கதையை சீமான் ஒரு சில வருடங்களுக்குள் திரைப்படமாக எடுக்காவிட்டால் அந்த கதையை தான் எடுக்க அனுமதி வேண்டும் என்று லிங்குசாமி கேட்டதாகவும் அதற்கு சீமான் அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் அஞ்சான் படத்தின் கதையை மாற்றி லிங்குசாமி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சீமான் திரைப்படம் எடுக்கவில்லை என்பதால் தற்போது சர்ச்சைக்குரிய அந்த கதையை லிங்குசாமி படமாக்கப்பட இருப்பதாகவும் அந்த கதையில்தான் தெலுங்கு நடிகர் ராம் பொத்தநேனி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சீமான் தனது கதையை படமாக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த கதையை சீமான் மற்றும் லிங்குசாமி ஆகிய இருவருக்குமே கூறியது நடிகர் மாதவன் தான் என்றும், தம்பி படத்தில் நடிக்கும்போது சீமான் இடமும் ரன் படத்தில் நடிக்கும்போது லிங்குசாமி இடமும் மாதவன் கூறியதாகவும் அதன் பின்னர் இருவரும் தங்கள் ஸ்டைலில் அந்த கதையை டெவலப் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆகமொத்தம் சீமான் மற்றும் லிங்குசாமி இடையே கடந்த பல வருடங்களாக நடைபெற்று வரும் கதை மோதலுக்கு மாதவன் தான் காரணம் என்று கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version