வணிகம்
கொரோனா வைரஸ்க்கு இந்தியாவில் தடுப்பூசி.. எப்போது..? ரகசியத்தை வெளியிட்ட நிறுவனம்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பனிகளில் சர்வதேச அளவில் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று ரகசியத்தை பையோகான் பார்மா கம்பெனி நிறுவனம் கிரண் மஜும்தார்-ஷா தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் மூன்று சிறு பார்மா கம்பெனிகள் கொரோனா வைரஸ்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளனர். அவர்கள் பல்வேறு புதுமையான உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
நாங்களும் அவர்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம். மருந்து தயாரிப்பதற்கான நிதியையும் திரட்டி வருகிறோம். இன்னும் ஒரு ஆண்டுக்குள் கொரோனா வைரஸ்க்கு இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்” என்று கிரண் மஜும்தார்-ஷா கூறியுள்ளார்.