சினிமா செய்திகள்
’மாநாடு’ படத்தின் பணிகள் திடீர் நிறுத்தமா? வெங்கட்பிரபு டுவிட்
சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் திடீரென போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தில் பணிபுரியும் இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சம்பள விஷயத்தில் இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதால் இயக்குனர் வெங்கட் பிரபு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறுத்தி உள்ளதாகவும் அந்த செய்தியை தெரிவித்துள்ளது
இந்த நிலையில் இது குறித்து வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். ’மாநாடு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன என்றும், தயவுசெய்து இதுமாதிரி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், எங்களை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதனை அடுத்து ’மாநாடு’ படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.