சினிமா செய்திகள்

’மாநாடு’ இன்று ரிலீஸ், ஆனால் 5 மணி காட்சி ரத்து: என்ன நடக்குது?

Published

on

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்

இதனால் ’மாநாடு’ படத்திற்கு முன்பதிவு செய்திருந்த சிம்பு ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் பிரச்சினை குறித்து நேற்று விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இதனை அடுத்து ’மாநாடு’ பணம் இன்று திட்டமிட்டபடி ரிலீஸாகும் என்றும் செய்திகள் வெளியானது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இன்று அதிகாலை 5 மணி காட்சியை பார்ப்பதற்காக சென்னை உள்பட பல நகரங்களில் திரையரங்குகளில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இன்று காலை ரிலீசாக இருந்த ஐந்து மணி காட்சி சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் மீண்டும் அதிருப்தி அடைந்தனர்

இருப்பினும் இன்று ’மாநாடு’ திரைப்படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்றும் எட்டு மணி காட்சி அல்லது பதினோரு மணி காட்சி ரிலீசாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

’மாநாடு’ படத்திற்கு பொருளாதாரப் பிரச்சினை இருப்பதாகவும் அதனை சரிக்கட்ட இந்த படத்தை மிகப் பெரிய தொகை ஒன்றுக்கு ஓடிடியில் விற்பனை செய்து இருப்பதாகவும் அந்த தொகையை வைத்து அனைத்து பொருளாதார பிரச்சனையும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் எனவே கண்டிப்பாக இன்று ’மாநாடு’ திரைப்படம் ரிலீசாகும் என்றும் தகவல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன

இருப்பினும் ’மாநாடு’ திரைப்படம் என்று ரிலீசாகுமா அல்லது தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

 

Trending

Exit mobile version