சினிமா செய்திகள்
‘மாநாடு’ முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு: என்ன காரணம்?
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் பல திரையுலக பிரமுகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானார். இதனால் ஒட்டுமொத்த திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெங்கட்பிரபு அவர்களின் தாயாரின் மறைவு காரணமாக ‘மாநாடு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது#மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடல் நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
இன்னொரு தேதியில் மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம்.
கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே
இன்னொரு தேதியில் first'sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம்.
கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே @SilambarasanTR_ @vp_offl @kalyanipriyan @iam_SJSuryah @Richardmnathan
— sureshkamatchi (@sureshkamatchi) May 11, 2021