சினிமா

மீண்டும் தள்ளிப்போகும் மாநாடு ரிலீஸ்.. இது என்னடா சிம்புவுக்கு வந்த சோதனை.!…

Published

on

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது. நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மாநாடு படத்தின் டிரெய்லரை பார்த்த போதே தெரிந்தது.

இப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படம் மீண்டும் தள்ளி செல்வதாக அறிவித்துள்ளார்.

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படத்திற்கு கடந்த 2 நாட்களாக ஆன்லைன் புக்கிங் நடந்து வந்தது. பல தியேட்டர்களில் 2 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மாநாடு ரிலீஸ் மீண்டும் தள்ளி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version