தமிழ்நாடு
அதிரவைத்த பேச்சு.. தேசிய அரசியலின் ஹீரோவானார் ஸ்டாலின்!
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அரசியலில் முக்கிய நபராக மாறியுள்ளார்.
நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று கருணாநிதி காலத்து திமுக சொன்னது போல, தற்போது ஸ்டாலின் காலத்து திமுக ராகுல் காந்தியை பிரதமராக பதவி ஏற்க அழைப்பு விடுத்து இருக்கிறது. ஆனால் இந்திரா காலத்தில் திமுகவின் குரல் எவ்வளவு வைரல் ஆனதோ தெரியாது, நேற்று ஸ்டாலின் பேசியதுதான் இன்று தேசிய அரசியலின் ஹாட் நியூஸ்.
நேற்று திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ”ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும்.ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக.” என்று கூறினார்.